1998-ல் நிறுவப்பட்ட குரு ஆனந்தா டிரேடிங் அன்று முதல் இன்று வரை... பழமை மாறாமலும் புதுமை மறவாமலும்... வாடிக்கையாளர்களுக்கிடையே நம்பக தன்மை குறையாமலும்... உயர்தர சாம்பிராணிகளை தயாரித்து கொண்டு வருகிறது ....
பல நூறு வருடங்களாக இந்து வழிபாடுகளின் ஒரு முக்கிய அங்கமாக சாம்பிராணிகள் திகழ்கிறது... சாம்பிராணி மற்றும் ஊதுபத்திகளின் உபயோகத்திற்கு ஓர் அழகிய அர்த்தமும் உண்டு... சாம்பிராணி எப்படி எரிந்து சாம்பல் ஆகியும் நறுமணம் பரப்புகிறதோ அதை போல மனிதனும் பொது நன்மைக்காக தியாகம் செய்ய வேண்டும் என்பதை சித்தரிக்கிறது .
இத்தகய முக்கியத்துவம் கொண்ட சாம்பிராணி பத்திகளின் தரம் மற்றும் குணம் கெடாமல், எந்த வித ரசாயன கலவையும் இன்றி இயற்கை மூலக்கூறுகளை கொண்டு தயாரிப்பதில் குரு ஆனந்தா டிரேடிங் பெருமிதம் கொள்கிறது . குரு ஆனந்த டிரேடிங் சிறு உற்பத்தியாளராய் இருப்பினும்.. தரத்தில் சிறந்து விளங்குகிறது.
குரு பிராண்ட் சாம்பிராணியை உபயோகிக்கும் போது வரும் புகையானது காற்றில் உள்ள சிறிய கிருமிகளை அகற்றி...சுவாசத்துக்கு ஒரு புத்துணர்வு அளிக்கின்றது ... மேலும் சாம்பிராணியில் இருந்து வரும் நறுமணம் ..மனிதனின் மூளையை ஊக்கவித்து நம்முள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது. மண அமைதியை உண்டாக்குகிறது
இருபது ஆண்டுகளுக்கு மேலாக நிரந்திர வாடிக்கையாளர்களை குரு ஆனந்தா டிரேடிங் பெற்றுள்ளது. குரு பிராண்ட் இந்திய அளவில் 2005 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது , இப்பொழுது குரு ஆனந்தா டிரேடிங் வணிகர்களின் விருப்பத்திற்கேற்ப சில முன்னணி நிறுவனங்களுக்கு அவர்கள் பெயரில் நாங்கள் தயாரித்து கொடுக்கிறோம், அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் வியாபார நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி. குரு உடனடி சாம்பிராணி துணை கொண்டு தினசரி செய்யும் பூஜைக்கு பலன் உண்டு. குருவே துணை ! குருவே போற்றி ! குருவே சரணம் !